விந்தை
தினசரி தாளில்
திடுக்கிட்டு வாசித்தேன்
அம்மன் சிலை மீட்பு...
படம் பார்த்து மகிழ்ந்தேன்
பிறைசூடன் தேவி முகம்...
நெஞ்சை களவாடிய
உன்னை கள்வன்
கடத்தி போனானென்று
கண்கள் கலங்கி போனதடி...
இடி சத்தம் இங்கே தான்
இங்கும் அங்கும் சிதறி
ஓலமிட்டு ஓடிய மக்கள்
என் நெஞ்சுக்குள் வெடித்த சத்தம்
வெளியே கேட்டது
விந்தையாக போனதடி...