காதல் அமுதானாய்

விரிந்த விழிகளில் கயலானாய்
புரிந்த புன்னகையில் தேனானாய்
மலர்ந்த முகத்தினில் வான் நிலவனாய்
நடந்த அழகினில் பல்லவன் சிலையானாய்
அசைந்த இடையில் நாட்டியக் கலையானாய்
அசையாதெனைப் பார்த்த பார்வையில் காதல் அமுதானாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Mar-19, 8:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே