கவிதை எழுதுகிறான் தமிழன்

பனையோலைச் சுவடியில் கவிதை
எழுதினான் பழந்தமிழன் !
வெண்காகித ஓலையில் கவிதை
எழுதினான் பின்வந்த தமிழன் !
கணினித் திரையோலையில் கவிதை
எழுதுகிறான் தற்காலத் தமிழன் !
எவ்வோலையில் யார் எழுதினால் என்ன
இதயத்தில் எழுதியோர் எத்தனை ?

எழுதியவர் : கவின் சாரலன் (24-Mar-19, 9:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே