பெண்கள் பற்றி தமிழ் பழமொழிகள்-

வீட்டுக்கு அலங்காரம் மனையாள்
வீட்டுக்கு இருந்தால் வெங்கலப் பெண்டாட்டி வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கற் பெண்டாட்டி
வீட்டுக்காரி என்று பெண்சாதிக்குப் பெயர்
வீதிரும் பெண்ணும் விலை போச்சுது, கை தப்பினால்
வெடவெட என்று தண்ணீர் குடிக்காதவளா உடன்கட்டை ஏறப்பொகிறாள்?
வெட்கத்தால் ஒல்காதவள் குலஸ்த்ரீக்குப் போகாது
வெடகப்படுகிற வேசியும், வெடகங் கெட்ட சமுசாரியும் உதவ மாட்டார்கள்
வெட்கமே கெட்டு வெளிப்பட்ட முண்டைக்கு முக்காடு ஏதுக்கு?
வெட்கம் அற்ற பெண்பிள்ளை வீண்

வேசி பற்றி

வேசி காசு பறிப்பாள் (210)
வேசி அவல் ருசியை அறியாள்,வெள்ளாட்டி எள் ருசியை அறியாள்
வேசி ஆடினால் காசு, வெள்ளாட்டி ஆடினால் சவுக்கு
வேசி உறவு காசிலும் பணத்திலுந்தான்
வேசி உறவும் வெள்ளாட்டி அடிமையும் காசு பணத்தளவே காணலாம்
வேசி கூச்சப்பட்டால் வெண் காசு கிடைக்குமா?
வேசிக்கு ஆணையில்லை,வெள்ளாட்டிக்குச் சந்தோஷமில்லை
வேசிக்கு காசு மேல் ஆசை, விளையாடுப் பிள்ளைக்கு மண் மேலாசை
வேசி மேல் ஆசைபடறது வெள்ளெலும்பை நாய் கவ்வினதுக்கு ஒப்பாம்
வேசியும் நாயும் விதி நூல் வைத்தியரும் பாசம் அற்று நிற்பது காண்பார்
வேசியைப் பெண்டுக்கு வைத்துக் கொண்டால், வேறே வினை தேவையில்லை
வேசி வீடு போவதும் வெந்து சாம்பல் ஆவதும் ஒன்னுதான் (220)
வேடக்காரனுக்கும் ஆடக்காரனுக்கும் பகை, வேசிக்கும் தாசிக்கும் பகை
துக்குணிச் சிறுக்கிக்கு முக்கலக் கந்தை
துடைகாலி முண்டை எல்லாம் துடைத்துப் போட்டாள்
சும்மாக் கிடந்த அம்மையாருக்கு அரைப் பணத்துத் தாலி போதாதா?
சுவத்துக் கீரயை வழித்துப் போடடி சுரணை கெட்ட வெள்ளாட்டி
தையல் சொல் கேட்டால் எய்திடும் கேடு

தைரிய லெட்சுமி தன லெட்சுமி


தோசிப் பெண்ணுக்கேற்ற சொறியாங்கொள்ளி மாப்பிள்ளை
பெற்ற தாயானாலும் குற்றம் எத்தனை பொறுப்பாள்?
பெற்ற தாயிடத்திலேயா கற்ற வித்தையை காட்டறது? 230
பெற்ற தாயுடன் போகிறவனுக்கு பத்தம் ஏது?
வித்துவானை அடித்தவனும் இல்லை, பெற்ற தாயுடன் போனவனும் இல்லை
வித்தைக் கள்ளி மாமியார் விறகு ஒடிக்கப் போனாளாம், கத்தாழை முள்ளு கொத்தோடு தைத்ததாம்
வித்தைக் கள்ளி, விளையாடுக் கள்ளி, பாகற்காய் விற்ற பழங்கள்ளி
விட்தைக்காரப் பெண்பிள்ளை, செத்த பாம்பை ஆட்டுகிறாள்
வித்தையடி மாமி விற்கிறதடி பணிகாரம்
விலைமோரிலே வெண்ணை எடுத்துத் தலை மகனுக்கு கலியாணம் பண்ணுவாள்
வடுகச்சி காரியம் குடுகுச்சு, முடுகுச்சு

கிழவன் கிழவி பற்றி

கிழம் ஆனாலும் கேட்டானாலும் கட்டிக்கொண்டவள் பிழைப்பாள்
கிழவனுக்கு வாழ்க்கைப் படிகிறதிலும் கிணற்றில் விழலாம்
கிழவன் ஆனாலும் கட்டை ஆனாலும் கட்டிக்கொண்டவள் பிழைப்பாள்
கிழவி இருந்த வீடும் கிளி இருந்த காடும் ஈடேறமாட்டாது (241)
கிழவி பாட்டைக் கின்னரக் காரன் கேட்பானா?
கிழவி போனபோது சுவர் இடிந்து விழுந்ததாம்
கிழவியும் காதம் குதிரையும் காதம்
கிழவியை அடித்தால் வழியிலே பேலுவாள்
கிழவியை பாட்டி என்பதற்கு கேட்க வேண்டுமா?
குங்குமக் கோதைக்கும் அஞ்சு பணம், குருட்டுக் கண்ணிக்கும் அஞ்சு பணமா?
கெட்டது கெட்டாய் மகளே கிட்ட வந்து படுத்துக் கொள்
கெட்ட பயலுக்கேற்ற துட்ட சிறுக்கி
கூலிக்குக் குந்துவாள் பிள்ளைக்குத் தவிடு பஞ்சமா? (25)
கூனி ஆனாலும் கூடை சுமந்துதான் கூலி பெற வேண்டும்
கூனி வாயாற் கெட்டாற் போல
செத்த பாம்பு சுற்ற வருகிறதே, அத்தை நான் மாட்டேன் என்றாற் போல
செத்த பாம்பை ஆட்டுவாளாம் வித்தைகார பெண்பிள்ளை
அன்ன நடை நடக்கப் போய் தன் நடையும் கெட்டாற்போல
அன்னிய சம்பந்தமேயல்லாமல் அத்தை சம்பந்தம் இல்லை என்கிறான்
அன்னிய மாதர் அவதிக்குவுவாரா?
அன்னைக்குதவாதவன் ஆருக்குமாகான்
ஆக்கமாட்டாத பெண்ணுக்கு அடுப்புக் கட்டி பத்தாம்
ஆக்கமாட்டாத அழுகல் நாரிக்குத் தேடமாட்டாத திருட்டுக் கணவன் வாய்த்தானாம்
ஆக்கவேண்டாம் அரைக்கவேண்டாம் பெண்ணே, என் அருகில் இருந்தாலும் போதுமடி கண்ணே (260)
ஆக்கி அரைத்துப் போட்டவள் கெட்டவள், வழிக்கூட்டி அனுப்பினவள் நல்லவள்
ஆங்காரிகளுக்கு அதிகாரி
ஆங்காலம் எல்லாம் அவசாரி ஆடி,சாங்காலம் சங்கரா சங்கரா என்கிறாள்
ஆசையாய் மச்சான் என்றாளாம், அடிச் சிறுக்கி என்று அறைந்தானாம்
ஆச்சி ஆச்சி மெத்தப் படித்துப் பேசாதே
அண்ணனிடம் ஆறுமாதம் வாழ்ந்தாலுமண்ணியிடத்தில் அரை நாழிகை வாழலாமா?
அண்ணனுக்குப் பெண் பிறந்தால் அத்தை அயல்நாட்டாள்
அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம்
அண்ணாங்கை அப்சரஸ்த்ரீ
அதமனுக்கு பெண்டாட்டியாய் இருப்பதைவிட பலவானுக்கு வேலைக்காரியாய் இருப்பதே மேல் (270)
அதிசயமான ரம்பை அரிசி கொட்டுகிற தொம்பை

அத்தை பற்றி


அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்பா
அத்தைக்கொழியப் பித்தைகில்லை ஔவையாரிட்ட சாபத்தீடு
அத்தை மகளானாலும் சும்மா வருமா?
அத்தை மகள் சொத்தை அவள் கேட்கிறாள் மெத்தை
அத்தை மகள் அம்மான் மகள் சொந்தம் போல
கள்ளப் புருடனை நம்பிக் கணவனைக் கை விடலாமா? (277)
மலடி அறிவாளோ பிள்ளை அருமை?
மலடிக்குத் தெரியுமா பிள்ளையைப் பெற்ற அருமை?
மலடிக்குத் தெரியுமோ மகப்பேறு வைத்தியம்? (280)
மலடி மகப் பெற்றாள்
மலடியைப் பிள்ளை பெறச் சொன்னால் பெறுவாளா?
மனையாளுக்கு உற்றது ஒன்றும் சொல்ல வேண்டாம், மாற்றானை ஒருநாளும் நம்பவேண்டாம்
மனைவியில்லாத புருடன் அரை மனிதன்
மனைவி இறந்தால் மணம், மகள் இறந்தால் பிணம்
முகம் சந்திர பிம்பம், அகம் பாம்பின் விடம்
முண்டைகண்ணி பிள்ளை இரண்டு கண்ணும் நொள்ளை
முண்டைச்சி சம்பந்தக்காரன் முன்னுக்கு வருவானா?
முண்டைச்சி பெற்றது மூன்றும் அப்படியே
முண்டையைப் பிடித்த கண்டமாலை முருங்கையையும் பிடித்தது
முப்பணியிட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறை (290)
மூடு முக்காட்டுக்குள்ளே போகிறவள்தான் ஓடிஓடி மாப்பிள்ளை கொள்ளுகிறது

கல்லானாலும் கணவன்


கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்
மூதேவி மூதேவி முகம் கழுவ வா மூதேவி
மூன்று முடிச்சு கழுத்தில் விழட்டும், முப்பது இலை குப்பையில் விழட்டும்
மேலான மினுக்கியைக் கொண்டவன் கெட்டான், மேட்டிலே
பயிரிட்டவன் கெட்டான்
கூத்திக்கு இட்டுக் குரங்கு ஆனான், வேசிக்கு இட்டு விறகு ஆனான்
கூத்தியார் பிள்ளைக்கு தகப்பன் யார்?
கூத்தியார் ஆத்தாள் செத்தால் கொட்டும் முழக்கும், கூத்தியார் செத்தால்
ஒன்றுமில்லை
கூத்தியார் செத்தால் பிணம், அவள் தாய் செத்தால் மணம்
குமரிக்கு ஒரு பிள்ளை கோடிக்கு ஒரு வெள்ளை
குமரி தனி வழியே போனாலும் கொட்டாவி தனி வழியே போகாது (300)
குமரியாய் இருக்கையில் கொண்டாட்டம் கிழவியாய் இருக்கையில் திண்டாட்டம்
கனவிலே கண்டவனுக்கு பெண் கொடுத்த கதை
தங்கப் பெண்ணே தாராவே, தட்டால் கண்டால் பொன் என்பான், த்கராசில் வைத்து நிறு என்பான், எங்கும் போகாமல் இங்கேயே இரு
தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆனால், தவத்துக்குப் போவான் ஏன்?
கலியாண சந்தடியில் தாலி கட்ட மறாந்தது போல
வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் ஆசை வண்ணாத்திக்கு கழுதை மேல் ஆசை
மயிருக்கு மிஞ்சின கருப்பும் இல்லை மதனிக்கு மிஞ்சின உறவும் இல்லை
ஆத்தங்கரையில் அம்மவைப் பார்த்தால் வீடில் பெண்ணைப் பார்க்கவேண்டாம் (310)
பொண்ணை போத்தி வள, ஆணை அதட்டி வள (ர்)
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை
கல்யாணமே என்றாளாம், தூரமே என்றாளாம்
மாட்டுக்கு மூக்கணாம் கயிறு பெண்ணுக்கு தாலிக் கயிறு
பொட்டு வச்சுக்கோ மாமியாரே பூ வச்சுக்கோ மாமியாரே என்றாளாம்
கொண்டு வந்தால் மகராசி இல்லாவிட்டால் பரதேசி
அடி வயத்தை அம்மா பார்ப்பாள் அடி மடியை ஆத்துக்காரி பார்ப்பாள்

பெற்ற தாய்


பெற்ற தாய்க்கும் வளர்த்த தாய்க்கும் உதவாமல் பிரிந்த குயில் போல
பெற்ற தாய் செத்தால் பெற்ற அப்பன் சிற்றப்பன்
பெற்ற தாய் பசித்திருக்க பிராமண போஜனம் செய்வித்தது போல
பெற்ற தாய் மூதேவி,, புகுந்த தாரம் சீதேவி (320)
பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு
பெற்றவளுக்குத் தெரியாதா பெயரிட?
பெற்றவளுக்குத் தெரியும் பிள்ளை அருமை
பெற்றவள் வயிற்றைப் பார்ப்பாள், பெண்சாதி மடியைப் பார்ப்பாள்
வலியப் பெண் கொடுக்கிறோம் என்றால் குலம் என்ன? கோத்திரம் என்ன என்பார்கள்
வலிய வந்த சீதேவியைக் காலால் உதைத்துத் தள்ளலாமா?
வலிய வந்தால் கிரந்திக்காரி
வல்லடி வழக்கைச் சொல்லடி மாமி (328)

எழுதியவர் : தமிழ் & வேதம் (25-Mar-19, 8:44 pm)
பார்வை : 130

சிறந்த கட்டுரைகள்

மேலே