கனவு

ஏரி நீருக்குள் சிறைபட்ட
வானமதை

தொட்டுப் பார்க்க

சினுங்களாய் சிரித்தது
என்னைப் போல

அனுமதியின்றி தொட்டது

யார் எனக் கேட்டு

நெற்றி சுருக்கியது வானம்
உன்னைப் போல

இதைப் பார்த்தகொண்டே
விலகிப் போகும்

மேகம் மெல்ல சிரித்தபடி

நம்மைப் போல

இந்த அழகெல்லாம் கண்
முன்

விரிகின்றதே கனவு போல..,

எழுதியவர் : நா.சேகர் (25-Mar-19, 11:41 pm)
Tanglish : kanavu
பார்வை : 216

மேலே