ஒழுக்கமின்றி வளர்ந்ததால்

உயர் பதவி பெற்று விட்டான்
ஒற்றுமை இல்லா மக்கள் “வாக்கு “ வால்
ஒரு கூறும் தெரியாது
ஒப்பற்ற இந்திய அரசமைப்பின் பால்
ஒழுக்கமின்றி வளர்ந்ததால்
ஓங்கி வளர்ந்தான் அரசியலில்
ஒவ்வாத செயலாலே வெற்றிகள் பல வாங்கினான்
அவ்வெண்ணம் கொண்டே தான்
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளான்
அவன் எப்படி மக்களுக்கு
அடிப்படை தேவைகளை செய்யுவான்
பையை நிரப்பி பயணிப்பான் - அரசு
கருவூலத்தை தினம் கரைத்திடுவான் - தவறை
கேட்க முயலும் மானிடரை - தலையை
கொய்தே மாலையாய் சூடிடுவான்
அவன் போல் பலரை அழிக்கவே
சட்டம் அரக்கதனமாய் மாறிடனும் - அதற்கு
அனைத்தும் அறிந்த அறிவு கூட்டம்
அரசை தனியே அமைத்திடனும்.
- - -நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (29-Mar-19, 9:46 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 239

மேலே