பசி
வெள்ளிக் கிண்ணத்தில்
பால்சோறு போட்டு
நிலவைக் காட்டி உனக்கு
ஊட்ட
நிலமை இல்லையேட
கண்ணா
வருமானதிற்கு வழியின்றி
பசிமட்டும் விரட்டுதேடா
கண்ணா
பசியை போக்க இங்கே
வழியின்றி தவிக்குதேடா
கண்ணா
பாழாய்போன வயித்துக்கு
இது
எங்கே புரிய போகுதுடா
கண்ணா
கழிவுநீர் மட்டும் இருப்பாய்
இருக்குடா கண்ணா
இதைகுடித்தால் உன் பசி
போகும்டா கண்ணா
இதுகூட இருப்பது தெரிந்தால்
வரி கேட்கும் அரசாங்கம்டா
கண்ணா நீ
கரையாது இதைக்குடித்து
பசியாறுடா கண்ணா..,