விழியற்ற தராசு
ஒற்றை கால்தான்
ஆயினும்
ஊனமில்லை....
கணம் கூடிடும்
இடம் சாய்கிறேன்
இரு புறமும்
இடுவது நீங்கள்....
ஆயினும்
இரும்பை விட
எடை கூடித்தான்
கூத்தாடுகிறது
அச்சிட்ட காகிதங்கள்....
மனதில் சுமக்கும்
பாவங்களை
தோலில் படிந்ததாய்
நீரில் கரைத்திடும்
எண்ணமே.....
என்னையும் படைத்து
படித்தது .....
இப்படிக்கு
நியாய முள்!