தேர்தல் அவலம்

தேர்தல் அவலம்

ஆணவத்திமிரில் ஆத்திகம் பேசி,,
நயவஞ்சகமாய் நாத்திகம் உரைத்து,
பதவியின் போதையில் நடுவீதினிலே, ,
பாத்திரமில்ல பிச்சைக்காரனய் ஆனாயே !!

ஆட்சிகள் தீர்ந்திட,
அரசவை கலைந்திட,
காண நிலங்களிலும்,
வெட்கமற்று வீதியூல வாராயோ !!

கால்கடுக்க காத்திருந்தோம்,
மதிக்க மறந்து சென்றாயே,
ஓட்டுக் கேட்டு வருகையிலே,
கரம் கூப்பி வேடமிட்டு வாராயோ !!!

வாக்கு மட்டும் இல்லையெனில்,
சாதியென்றோ தொலைந்திருக்கும்,
சாதிக்கொரு தலைவனெல்லாம்,
சோழிப்பையை ஏந்தி வந்திருப்பான் !!

காசுக்காக வாக்கை விற்று
கயவனெல்லாம் தலைவனாகி போனானே,
என்ன அவலம் என்ன அவலம்
உரிமையெல்லாம் கூவி கூவி விற்றதினால்
வந்த அவலம் இந்த அவலம் !!!

எழுதியவர் : தௌபீஃக் (3-Apr-19, 5:15 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
பார்வை : 796

மேலே