தாய்மை நிழல்

கோடை வெயில்
கொளுத்தினாலும் தீயாய்,
பிள்ளைகளுக்குச்
சோலைநிழல் வேண்டாமாம்,
தாயின்
சேலைநிழலே போதுமாம்..

பாலை நிலமானாலும்
பெற்றதாய் பக்கத்திலிருந்தால்,
உற்றதுணை அவள்போல்
வேறொன்றுமில்லை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Apr-19, 6:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 151

மேலே