வாயில்லாப்பூச்சி

வாயில்லாப்பூச்சி
====================================ருத்ரா

உன்னை
வானவில் என்றால்
பச்சோந்தியா நான்
என்பாய்?
பட்டாம்பூச்சி என்றால்
பட்டுப்போனவளா என்பாய்?
பவள மல்லி என்றால்
அவளா உனக்கு
சொல்லிக்கொடுத்தாள்
என்பாய்?
எதுவும் சொல்லமாட்டேன்
என்று நின்றேன்.
வாயில்லாபூச்சி
எனக்கு வேண்டாம்
என்று போய் விட்டாயே!

=========================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (5-Apr-19, 11:43 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 238

மேலே