இதயத்துக் கள்ளி

புத்தனின் கருத்தை
பார்வையால் சொல்லி
போதித்துச் சென்றாயே என்
இதயத்துக் கள்ளி.

செக்கச் சிவந்த உன்
கன்னத்தைக் கிள்ளி
காதலால் மகிழவேண்டும்
மனதால் துள்ளி .

பவழமும் முத்தும் தன்னை
பாதுகாக்க எண்ணி உன்
பல்லாய் வாயாய்
மாறியதோ கன்னி.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (7-Apr-19, 6:28 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 333

மேலே