இதயத்துக் கள்ளி
புத்தனின் கருத்தை
பார்வையால் சொல்லி
போதித்துச் சென்றாயே என்
இதயத்துக் கள்ளி.
செக்கச் சிவந்த உன்
கன்னத்தைக் கிள்ளி
காதலால் மகிழவேண்டும்
மனதால் துள்ளி .
பவழமும் முத்தும் தன்னை
பாதுகாக்க எண்ணி உன்
பல்லாய் வாயாய்
மாறியதோ கன்னி.
--- நன்னாடன்.