நீ எனக்கு தந்த ஏமாற்றம் 555

என்னுயிரே...


என் வாழ்வில்
காலம்
செய்த மாற்றமா...


இல்லை நீ
செய்த
ஏமாற்றமா...


தெரியாமலே

நடைபோடுகிறேன்...


ஓர் நடைப்பிணமாக

நான் மண்ணில்...


உன்னை ரசித்த

இந்த விழிகளுக்கும்...


உன்னை மட்டும்

நேசித்த இதயத்திற்கும்...


தீராத வலியை

கொடுத்துவிட்டாய்...


வலிகளை சுமந்து

நான் வாழ்ந்தாலும்...


மீண்டும் உன்னை பார்க்க

முடியாதா என்று ஏங்குகிறேனடி...


என் விழிகளுக்கும்

என் இதயத்திற்கும்...


ஒருநாள் விருந்துவை...


உன் வரவை நோக்கி ஒவ்வொரு

நாளும் தொடருதடி...


என் வாழ்வின்
பயணம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (7-Apr-19, 7:17 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1603

மேலே