எழுத்தறியார் கல்விப் பெருக்கம் – நன்னெறி 21
இருவிகற்ப நேரிசை வெண்பா
எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்தறிவார்க் காணின் இலையாம் - எழுத்தறிவார்
ஆயும் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில்
வீயும் சுரநீர் மிகை. 21 - நன்னெறி
பொருள்:
கற்றோர் ஆராய்ந்து தேடும் சிவபெருமானின் ஜடாமுடியைக் கண்டதும் கங்கையின் பெருக்கு ஒடுங்கி விடுவதைப் போல, கல்வியறிவில்லாதவரின் செருக்கு முற்றிலும் கற்றறிந்த மெய் ஞானியர் முன் இல்லாது போய் விடும்.