எழுத்தறியார் கல்விப் பெருக்கம் – நன்னெறி 21

இருவிகற்ப நேரிசை வெண்பா

எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்தறிவார்க் காணின் இலையாம் - எழுத்தறிவார்
ஆயும் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில்
வீயும் சுரநீர் மிகை. 21 - நன்னெறி

பொருள்:

கற்றோர் ஆராய்ந்து தேடும் சிவபெருமானின் ஜடாமுடியைக் கண்டதும் கங்கையின் பெருக்கு ஒடுங்கி விடுவதைப் போல, கல்வியறிவில்லாதவரின் செருக்கு முற்றிலும் கற்றறிந்த மெய் ஞானியர் முன் இல்லாது போய் விடும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Apr-19, 10:17 am)
பார்வை : 82

மேலே