வசந்தங்கள் வரமாகும்

வெட்டிக் கொண்டாலும்
ஆனந்தம் கொள்ளும்
கேக்குகள் இன்று
விஜய்யின் நாவினில்
ஒட்டிக் கொள்வதால்...

ஊதி அணைத்தாலும்
மகிழ்ச்சி கொள்ளும்
மெழுகுவர்த்திகள் இன்று...
நூறாண்டு காலம்
மீண்டும் மீண்டும்
விஜய்யின் பிறந்தநாட்களில்
ஒளிரூட்டப் படுவதால்..

பத்தொன்பதாம் பிறந்தநாள்
கொண்டாடும் மாஸ்டர் விஜய்
இன்று மிஸ்டர் விஜய் ஆகிறான்...
இருந்தும் மாஸ்டர் விஜய்
ஆகவே இருக்கிறான் இவன்
பயிலும் பாடங்களில்...

வீதிகளில் விஜய் நடந்தால்
அத்தனை விழிகளும் பார்க்கும்
இவனது ஆளழகைக் காண...
சபைகளில் விஜய் இருந்தால்
அத்தனை செவிகளும் கேட்கும்
இவனது அறிவழகைக் காண...

பக்கத்து ஊர்களுக்குப்
பயணப்படுவதையே பெரிதாக
எண்ணும் எங்கள் வயதில்
விஜய் இன்று வடகிழக்கு
மாநிலம் அஸ்ஸாம்...
இந்தியாவின் அனைத்து
மாநில மாணவர்களும்
சங்கமிக்கும் ஐஐடி
கௌஹாத்தியில்..
மனம் கொள்ளா
மகிழ்ச்சி எமக்கு...

தமிழ் மேல் மிகுந்த
ஆர்வம் விஜய்க்கு..
விஜய்யின் பிறந்தநாள்
பரிசாக ஒரு தமிழ்ப் புத்தாண்டே
விகாரி எனும் பெயரில் வருகிறதே..

மாவட்டம் தாண்டி பள்ளிக்கூடம்
மாநிலம் தாண்டி கல்லூரி...
கல்வி கற்கும் விஜய்
நாடுகள் தாண்டியும்
பணி அமர்ந்து சிறந்து
வாழ்க பல்லாண்டு...
வளங்கள் எல்லாம் பெற்று...

விஜய்.. உன் வாழ்க்கைப்
பாதையெங்கிலும்
வசந்தங்கள் வரமாகும்..
வானமும் வசப்படும்...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

அன்புடன் பெரியப்பா...
ஆர்.சுந்தரராஜன்
👍🌹😀🙏🎂💐🍰

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (13-Apr-19, 6:30 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 439

மேலே