சித்திரைப் பாவையே வருக

கவிதை

சித்திரைப் பாவையே வருக !
பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்


இன்று
நாங்கள் காலை துயில் எழுந்து
நாட்காட்டியைப் பார்த்தால்
பங்குனித்திங்கள் பெற்றெடுத்த
சித்திரைப்பாவையே உந்தன்
மத்தாப்பூ முகம் தெரிகிறதே !

இன்று
நோக்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
நேசக்கரம் நீட்டுகிறதே !

இன்று
கேட்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
மனிதநேயம் ஒலிக்கிறதே !

இன்று
தீண்டுமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
மலரின் மென்மை உணரப்படுகிறதே !

இன்று
பேசுமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
சீரும் சிறப்பும் பேசப்படுகிறதே !

இன்று
நுகருமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
நறுமணம் வீசுகிறதே!

இன்று
வணங்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
தெய்வ அருள் பொழிகிறதே!

இன்று
சித்திரைப்பாவை உன் வரவாலே
நேத்திரம் குளிர்ந்தது
சத்தியம் தர்மம் மனிதநேயம்
நித்தியம் உலகில் வளர வேண்டி
சித்திரைப் பாவையை நாம்
பக்தியுடன் வணங்கி வரவேற்போம் !

பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (13-Apr-19, 10:36 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 293

மேலே