காலம் வரைந்த கோலம்

காலம் வரைந்த கோலம்

நாளைய நடப்புகளின்
ஒத்திகைகள்
இடம் பிடித்துக் கழிக்கின்றன
இன்றைய பொழுதுகளை….

மாற்றோரின் கருத்துக்களை
மையங்கொண்ட வட்டங்களுள்
வாடி உழல்கிறது
வாழ்க்கை……

நேர்மறை – எதிர்மறை
இரு கரைகளென
இடைப்பட்டு பாய்கிறது
கட்டுறா மனது……..

யூகங்களின் எச்சிலில்
பின்னப்பட்ட வலைக்குள்
சிக்கிச் சுழல்கிறது
எண்ணங்கள்……

இறந்த காலங்களின் படிப்பிணைகள்
நிகழ்காலம் வரையும் கோலத்தில்
ஓர் கரும்புள்ளியாய் தங்களை
அமர்த்திக் கொள்கின்றன……

சு.உமா தேவி

எழுதியவர் : (15-Apr-19, 5:38 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 49

மேலே