காலம் வரைந்த கோலம்
காலம் வரைந்த கோலம்
நாளைய நடப்புகளின்
ஒத்திகைகள்
இடம் பிடித்துக் கழிக்கின்றன
இன்றைய பொழுதுகளை….
மாற்றோரின் கருத்துக்களை
மையங்கொண்ட வட்டங்களுள்
வாடி உழல்கிறது
வாழ்க்கை……
நேர்மறை – எதிர்மறை
இரு கரைகளென
இடைப்பட்டு பாய்கிறது
கட்டுறா மனது……..
யூகங்களின் எச்சிலில்
பின்னப்பட்ட வலைக்குள்
சிக்கிச் சுழல்கிறது
எண்ணங்கள்……
இறந்த காலங்களின் படிப்பிணைகள்
நிகழ்காலம் வரையும் கோலத்தில்
ஓர் கரும்புள்ளியாய் தங்களை
அமர்த்திக் கொள்கின்றன……
சு.உமா தேவி