செல்லத் துடிக்குது ம்னது

செல்லத் துடிக்குது மனது

ஒரே ஓர் ஓரப் பார்வை
ஓராயிரம் குதிரை சக்திகளை
என்னுள் உருவாக்கி
இழுத்துச் செல்கிறது
அவள் பின்னே என்னை…..

மொட்டென விரியா
அவள் குறும்புன்னகையும்
இதயத் தட்டுகளில்
மெட்டுக்களாய் உருவாகி
இசைக்கின்றது என் இதழ்களை…

காற்றில் படர்ந்த அவள் கேசம்
என் முகம் முழுக்க
கிறிப் புதைத்த நறுமணத்தை
நாளெங்கும் முகர்கிறேன்
என் நாசியோரம்.....

அவள் பேசிடாத வார்த்தைகளும்
என் செவிமடல் தூக்கி
சிலிர்த்திடச் செய்கிறது
நினைவும் நிஜமும் பிரித்தறியாது

அவள் அடி தொடர்வதே
புனித யாத்திரையென
நித்திரையிலும் செல்கின்றன
கனவு கிழித்து என் இரவுகள்...... சு. உமா தேவி

எழுதியவர் : சு.உமாதேவி (15-Apr-19, 6:49 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 138

மேலே