சுயநலம்
சுயநலம்
சுற்றும் முற்றும் நோக்குகின்றான்
ஊர்ஜிதம் செய்துவிட்டான்
கடவுளைத் தவிர யாருமில்லையென்று….
கை வழிய அள்ளியவனாய்
விரைகின்றான் வாயிலை நோக்கி….
அங்கே முட்டிக்கொண்ட
பார்வையற்றவனின் காலடியில்
கொட்டியது பிரசாதமல்ல
அவன் சுயநலம் ……தான்……..
சு.உமா தேவி