சுயநலம்

சுயநலம்

சுற்றும் முற்றும் நோக்குகின்றான்
ஊர்ஜிதம் செய்துவிட்டான்
கடவுளைத் தவிர யாருமில்லையென்று….
கை வழிய அள்ளியவனாய்
விரைகின்றான் வாயிலை நோக்கி….
அங்கே முட்டிக்கொண்ட
பார்வையற்றவனின் காலடியில்
கொட்டியது பிரசாதமல்ல
அவன் சுயநலம் ……தான்……..

சு.உமா தேவி

எழுதியவர் : (15-Apr-19, 9:00 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : suyanalam
பார்வை : 35

மேலே