தீர்த்தம்

வல்லநாட்டுத் தண்ணி தான்
குழாய் போட்டு வருதாம்
அது தான் பிள்ளையார் கோவில்
குடமுழுக்கிற்காம்
நேற்று வரை சவர் தண்ணி
இன்றெப்படி தீர்த்தமானதென்றேன்
தெய்வ அனுக்கிரகம் என்றார்கள்
நம்பும் படியாகவா இருக்கிறது
சரி என்ன வேண்டுமோ சொல்லிக் கொள்ளுங்கள்

என் மகளைக் குளிப்பாட்ட வேண்டும்
அக்குழாயைத் திற
வல்லநாட்டுத் தண்ணீர்
தீர்த்தமாகட்டும்

எழுதியவர் : mariselvam (19-Apr-19, 11:22 am)
சேர்த்தது : Mariselvam
Tanglish : theeertham
பார்வை : 30

மேலே