kathal

தாயின் அரவணைப்பில் வாழாமல் ....
தந்தையின் தோல் மேல் சாயாத ...
என்னவனுக்காக நன் சொல்ல நினைக்கும் ஒரு சில வார்த்தைகள்

உன் நெற்றி தொட்டு முத்தமிடும் நேரத்திலும்..
உன் விரலோடு கை கோர்க்கும் நேரத்திலும்...
உன்னை தாய் போல் அரவணைத்து ...
தந்தையாக தோல் கொடுத்து
தாரமாக முத்தமிட்டு..
என் மகனாக உன்னை என் மடிமேல் சாய்த்து..
காலம் முழுவதும் உன்னை காத்திருப்பேனடா என்னவனே...

கலங்காதே ... காலங்கள் மாறிடும் ..
கனவுகள் நிறைவேறிடும்...
நாம் கரங்கள் கோற்கையிலே ..

எழுதியவர் : Divya (19-Apr-19, 3:32 pm)
சேர்த்தது : Divya
பார்வை : 53

மேலே