இறைவா

இருளில் ஒளிரும்
செந்தளிரும் நீ
அலையாய் மணலாய்
திளைக்கும் பொருளும் நீ
நிஜமாய் நிலையாய்
நிற்கும் பொறுமை நீ
பிட்சை தீட்சை
அளிப்பவன் நீ
இச்சை மோட்சம்
கழிப்பவன் நீ
நோயும் பசியும்
ஊட்டுபவன் நீ
சிந்தை விந்தை
கணிப்பவன் நீ
ஏடும் காடும்
சளைத்தவன் நீ
உறவு துறவு
தகர்த்தவன் நீ
மரபு பிழை
மறந்தவன் நீ
கொண்டாய் கொள்வாய்
அன்பாய் இறைவா நீ.

எழுதியவர் : - ஐ - (22-Apr-19, 11:41 pm)
சேர்த்தது : ஐயெழுத்து
Tanglish : iraivaa
பார்வை : 321

மேலே