ஏன் என்ற கேள்வி

பூமி தனக்குத் தானே சுழல்கிறது
ஏன் ?
இரவு பகலுக்காக !

இரவு பகலாக நீ சுழல்கிறாய்
ஏன் ?
பொருளாதாரத்திற்காக !

பொருளாதாரம் சமமாக சுழல்வதில்லை
ஏன் ?
அரசியல் சம நீரோடை வகுக்காததால் !

பிச்சை ஓடேந்தி தெருவில் நிற்கிறான் மனிதன்
ஏன் ?
தருமம் தழைக்க உழைப்பைத் தியாகம் செய்த தியாகியவன் அதனால் ?

பணத்தைப் பெற்று மக்கள் வாக்களிக்கிறார்கள்
ஏன் ?
கருப்பும் வெள்ளை ஆகட்டும் என்ற நல்லெண்ணத்தால் !
அல்லது
வரியாகப் போன பணம் கொள்ளையில் நிறம் மாறி
கொல்லையில் மாரியாகி வந்து பொழிவதாலோ !

பணம் வழங்குவோர் ஆளும் கட்சிகளா எதிர் கட்சிகளா சுயேட்சைகளா
எவர் ஏன் ?
வழங்கும் வள்ளல்களை பேதம் பார்ப்பது ஏழு கண்டோர்க்கு அழகில்லை அன்றோ
தேர்தல் காலங்களில் வரும் எட்டன்றோ இவர் !

நதி நீர் இணைப்புகள் நாட்டிற்கு நலனும் வளமும்
தரும் அன்றோ
நல்ல தலைவர்கள் நாட்டில் வந்து செயல்படும் வரை
இது தூரத்துத் தொடுவானம் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அழகு !

எழுதியவர் : கவின் சாரலன் (24-Apr-19, 10:06 am)
Tanglish : aen entra kelvi
பார்வை : 109

மேலே