யாரும் பாரா தூரம் சென்று

யாரும் பாரா
தூரம் சென்று
நேரம் போகா
காலம் அமைத்து
உன் ஒற்றை நினைவில்
உலகை மறந்து
இரு இமைக்கு இடையில்
முளைக்கும் கனவாய்
நீ எனக்குள் தினம்
உதிரா மலராய்
பூத்திட வேண்டும்
இவ்வுயிர் மறந்து
நான் இறப்புற நீ
அருகினில் வேண்டும்
உன் மடி எனை
தாங்கிடும் கணம் போதும்...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (24-Apr-19, 9:45 pm)
பார்வை : 52

மேலே