இல்லாதவர்கள்

ஒவ்வொரு ஆண்டும்
வந்துகொண்டுதான் இருக்கு
இவ்வொரு நாளும் - வீணாய்
சென்றுகொண்டுதான் இருக்கு!

அதில் நேற்று நாம் என்ன செய்தோம்?
இன்று எப்படி இங்கு வாழ்கின்றோம்?
இருக்கும் ஒவ்வொரு நொடியையும்
வீணாய் செலவு செய்கின்றோம்!

நம் மீது தவறை வைத்துக் கொண்டு
காலத்தின் மீதுதான் பழிபோடுகின்றோம்!
ஒவ்வொரு நாளையும்
சரியாய் பயன்படுத்தி இருந்தால்...
நம் நிலையும் மாறியிருக்கும்!

முயற்சிக்க மறுத்ததினால்...
இல்லாதவர்களாய்
இன்று -நாம்!

எழுதியவர் : கிச்சாபாரதி (26-Apr-19, 6:58 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : illaathavargal
பார்வை : 93

மேலே