மீண்டும் சந்திக்கும் வரை

சொல்ல துடிக்குது மனசு
மெல்ல தடுக்குது நாணம்
என்ன நினைத்தேனோ/
அவளே என் முன்னால்
இதுவும் ஒருவகை ஈர்ப்புதான்
காதலும் காந்தமும் ஒன்றுதான்
எனக்கு கொடுப்புக்குள் சிரிப்பு
இருந்தும் நான் சிரிப்பதை
அவள் தெரிந்து கொள்ளவில்லை
திடீரென என்பக்கம் அவள் பார்வை
ஒரு வினாடி பயந்துவிட்டேன்
என்ன பயம் அது புரியவில்லை
சுதாரித்து விட்டு நோக்கினேன்
அவள் கண்களை
அவை சொன்னது இப்படிப் போல் தோன்றிற்று
ஹாய் ஐ லவ் யூ டா
எனது கண்களும் அப்படியே சொல்வதுபோல்
நானும் நினைத்தேன் ,
அவள் தோழிக்கு good bye சொல்லும் பாவனையில்
என்னையும் ஒரக் கண்ணால் நோக்கினாள்
மீண்டும் சந்திக்கும் வரை .......

எழுதியவர் : பாத்திமாமலர் (29-Apr-19, 2:14 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 605

மேலே