காசு வேண்டுமோ
காசு வேண்டுமோ?
கடவுளை வணங்க காசு வேண்டுமோ
ஆராதிக்கவும் வேலையாள் வேண்டுமோ
எல்லாம் செய்வார் கடவுள் என்றால்
ஏனடா இங்கே
இத்துனை கலவரம்
எட்டி நின்று வேடிக்கையேனோ
இது கடவுளின் நீதிதானோ ?
நெருப்பு சட்டி தூக்கும் கையாலே
மனிதனை வெட்டி சாய்க்கின்றாய்
கற்பூரம் ஏத்தி பூசை செய்து
கொலை கத்தியும் தூக்குகிறாய்
பிறர் வாழ வேண்டுவது போல்
வாழ்வை கெடுக்கின்றாய்
அன்பு கொடு சக்தி என்று சொல்லி
ஏனோ வம்பும் செய்கின்றாய்
மனிதனை மனிதனாய் நினைப்பதைவிட்டு
கல்லையேனோ கடவுளாய் காண்கின்றாய்
காசை விரையம் செய்கின்றாய்
நேசக்கரம் நீட்ட மறந்து - சாமி
கோசம் போடுகின்றாய்
வேஷம் களையும் ஒருநாள்
என்பதை மறந்து நாசம் செய்கின்றாய்
கெடுதல் இல்லா நினைவு கொண்டால்
நெடுநாள் நிம்மதி வாழ்க்கையடா
உள்ளவரை உண்மையாய்
வாழ்ந்து பார் - உள்ளம்
மகிழுமடா - உலகம்
போற்றுமடா!
சிந்தனையுடன்
மு. ஏழுமலை
9789913933