கல்லூரி

வா ....
காற்றை களவாடலாம் ...
கடந்து வந்த பாதை முழுவதையும்
கடலின் நீலத்தை எடுத்து
கற்ப்பனையில் கவி எழுதலாம்
மொழி
மதம்
இனம்
கடந்த அன்பு ......
நட்பு என்னும் நூலில் வார்த்தைகள் கோர்த்து அழகு பார்க்கலாம்
ஆயிரம் அடி எடுத்து வைத்தாலும் அரை நொடி கூட தோழியிடம் தவறு நினையாமல்
பார்ப்பதை எல்லாம் காதல் செய்ததும்
ரத்தம் இல்லாமல் யுத்தம் செய்ததும் இங்கே தான்

கல்லூரி என்னும் நந்தவனத்தில்
இவள் மட்டும் குறிஞ்சி மலராய் தோன்றினால்
எட்டா உயரமும் இல்லை
தொட்டு பேசும் தூரமும் இல்லை
அவள் அருகில் சென்று பேச நினைக்கும் வார்த்தைகள் எல்லாம்
என் இதயத்துக்குளே இடம் பெயர்ந்தன....
உன் விழி பட்டே உடையும் விண்மீன்கள் கூடத்தில்
நேற்று தோன்றிய நான் மட்டும் என்ன விதி விலக்கா .......

எழுதியவர் : செந்தில் குமார் அ (3-May-19, 12:22 pm)
சேர்த்தது : sendil
Tanglish : kalluuri
பார்வை : 546

மேலே