ஆசியர்கள்

இவர்கள்

நம்மை உயரத்தில் ஏற்றிவிட்ட
ஏணிப்படிகள் - சமுதாயத்தின்
வளர்ச்சித் தூண்களை செதுக்கிய
நவ பாரத சிற்பிகள்!

எழுத்தறிவித்த இறைவண்கள்
அறிவுக் கோவிலில் குடிகொண்ட
வணங்கப்படாத பிரம்மாக்கள் - பாரத நாட்டை
வளர்ச்சிப் பாதையல் அழைத்து செல்லும்
ஞான ஒளிகள் - அறிவுக் கண்ணை திறந்திடும்
சத்திய சுடர்கள்.

புதுப்பாதை காட்டிடும் புரட்சியாளர்கள்!
தங்கலையே தேய்த்துக் கொள்ளும்
சந்தனங்கள்.- நமை வாழவைத்த
தெய்வங்கள் - வாழியவே இந்நாளில்!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (5-Sep-11, 9:24 am)
சேர்த்தது : Thanga Arockiadossan
பார்வை : 347

மேலே