கண் பட்டதுகண்ணில் பட்டது
#கண்பட்டது.. கண்ணில் பட்டது..!
கண்ணழகு கவியழகு
என்றேதான் கண் வைத்தார்
கண்பட்டுப் போனதனால் - கண்ணும்
புண்பட்டு போனதுவே. !
தமிழாலே கவிபாடி
தெருவீதி வருகையிலே
பெருங்காற்று மரம் உலுக்க
சிறுகுச்சி விழிக்குள்ளே..!
கண் மருந்து குடித்திருக்க
கண்ணீரும் வழிந்திருக்க
அன்புகொண்டோர் என்விழிக்கே
அளித்திட்டார் தாய்ப்பாலே
விழியோடு உறவாடி
வலியாவும் விலகியதே
எப்போதும் மலர்ந்திருக்கும் - விழி
இப்போது சிரிக்கிறதே..!
என்னின்ப துன்ப மெல்லாம்
என்னிறைவா உன்னாலே
சீர் செய்தும் காத்திட்டாய்..
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..!
#சொ.சாந்தி