கண் பட்டதுகண்ணில் பட்டது

#கண்பட்டது.. கண்ணில் பட்டது..!

கண்ணழகு கவியழகு
என்றேதான் கண் வைத்தார்
கண்பட்டுப் போனதனால் - கண்ணும்
புண்பட்டு போனதுவே. !

தமிழாலே கவிபாடி
தெருவீதி வருகையிலே
பெருங்காற்று மரம் உலுக்க
சிறுகுச்சி விழிக்குள்ளே..!

கண் மருந்து குடித்திருக்க
கண்ணீரும் வழிந்திருக்க
அன்புகொண்டோர் என்விழிக்கே
அளித்திட்டார் தாய்ப்பாலே

விழியோடு உறவாடி
வலியாவும் விலகியதே
எப்போதும் மலர்ந்திருக்கும் - விழி
இப்போது சிரிக்கிறதே..!

என்னின்ப துன்ப மெல்லாம்
என்னிறைவா உன்னாலே
சீர் செய்தும் காத்திட்டாய்..
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (8-May-19, 8:56 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 51

மேலே