சில நேரங்களில் சில நாய்கள்

கோணல் முக நாய்களைக் கண்டாலே
துறத்தி விடுகின்றன, தெரு நாய்கள்.
அதன் சந்தை மதிப்பை அறியாததால்...!

குரைக்கிற நாய் கடிக்காதென்பதை
கேட்டாலே
உணர்ச்சிவசப்படுகிறாள்
வெறிநாய்க்கடியால் இறந்தவனின் மனைவி...!

காதலியோடு அவள் வீட்டின்
நாயையும் வசப்படுத்த வேண்டி
பிஸ்கெட் பாக்கெட்டுகள்
விற்பனையாகின்றன
சில்லரைக்கடைகளில்...!

ஆட்டிரச்சியுடன் நாய்கறியும்
சேர்க்கப்படுவதாக செய்திகள் பரவ
தேடப்பட்டன தொலைந்துப்போன
தெரு நாய்கள்...!

திருடிச்சேர்த்த பொருளை பதுக்க
காட்டு பங்களாவுடன்
வேட்டை நாய்கள்
வாங்குவதும் அவசியமாகிறது
அரசியல்வாதிகளுக்கு...!

புயல் வெள்ளத்தால்
ஊரே மூழ்கி கிடக்க
தன்னைக்கடித்த நாய்க்கு
எதுவும் ஆகிவிட கூடாதென்று
வேண்டிகொள்கிறான்
தடுப்பூசி போட காசில்லாதவன்...!

செல்லக்குட்டியென நாயை
கொஞ்சும் ஒருத்தி,
தன் மகனை நாயே எனத்திட்ட
விழுந்தடித்து வெளியே ஓடியது
அவள் வீட்டு நாய்...!

புது கார் வாங்கி
கோவில் செல்லும் முன்னமே
கால்தூக்கி அபிஷேகம்
செய்தது
டயருகுக்கு பழகிய நாயொன்று...!

மின்சார கம்பிகள்
பூமிக்குள் புதையுண்டு
மின் கம்பங்களெல்லாம்
அகற்றப்பட்ட பின்,
தன் கழிவிடங்களைத்தேடி
அலைகின்றன
நகரத்து நாய்கள்...!

பிச்சைக்காரி போட்ட
ஒரு துண்டு ரொட்டிக்காக
அவளுடன் சுற்றிய
தெரு நாய் ஒன்று,
முந்தைய இரவில் - அவளை
புணர்ந்து கொன்றவனை
துரத்தி குறைப்பதை,
காவல் துறையுடன் வந்த
மோப்ப நாயாவது புரிந்துகொள்ளுமாjQuery171033218541241444854_1557337751799?

எழுதியவர் : (8-May-19, 11:18 pm)
சேர்த்தது : தங்கராஜா
பார்வை : 50

மேலே