காதலித்த கவரிமான்
காதலித்தேன் ஒருவனை
கவரிமான் என்றெண்ணி
அவனோ காட்டிக் கொண்டான்
தன்னை ஒரு தன்மானன் என்று
இருளிலும் எந்நிலையிலும் அவன்
முடியும் கூட முரணாக நடந்ததில்லை
பிணக்கில்லாமல் சென்றன பெரும் நாட்கள்
பிறந்தநாளில் பூவிதழைத்தந்து இதழ் முத்தம் கேட்டான்
துணுக்கிற்று துயரடைந்து தூர வந்தேன்
மடக்கென்று மன்னிப்பைக்கேட்டு வாடி நின்றான்
அது முதல் அவன் போக்கு மாறலாச்சு
அறியாமல் அவனோடு நானும் பழகலாச்சு
அடிப்பட்ட நாகம் போலே வஞ்சம் கொண்டு
அங்கத்தை அலங்கோலம் படுத்த நாளும் பார்த்தான்
அறியாத நானும் அவனோடு குளிர்பானம் குடித்து
அற்பமான அவனால் என் கற்பை இழந்தேன்
அன்று ஓடிய அவனைத் தேட மனமது கூச
அந்நிகழ்வை விபத்தாய் எண்ணி அழுது தெளிந்தேன்.
--- நன்னாடன்