அம்மா
நான் பூமியில் பிறந்த
அந்த நொடி
என் போல் அவளும் பிறந்தாள்
புதிதாய் ...
தன் வலியை மறந்து
கண்களில் கண்ணீர் பெருக
அந்த நொடி மறந்தாள்
தான் வாழ்ந்த மொத்த வாழ்க்கையும்...
தனக்குப் பிடித்தமான
உணவை மறந்து
என் போல் பருகினாள்
நான் வைத்த மிச்சப்பாலை
தன் அமைதியான
புன்னகையை மறந்து
என் போல் சிரித்தாள்
கொஞ்சல் சிரிப்பு
தன் வேகமான
நடையை மறந்து
என் போல் தவழ்ந்தாள்
மெல்ல மெல்ல
தன் நிதானமான
பேச்சை மறந்து
என் போல் பேசினாள்
மழலை மொழி
இப்போது புரிகிறது
என் போல் அவள் செய்யவில்லை
அவள் போல் நான் வளர்ந்தேன்...
அன்னையர் தின நல் வாழ்த்ததுக்கள்....💐💐💐