உன் கடும் வார்த்தைகளும் சுகம்தான் எனக்கு 555
உயிரானவளே...
நாம் பழகிய நாட்கள்
சில மாதங்கள் என்றாலும்...
என் மனம் முழுவதும்
நீயே
நிறைந்து இருக்கிறாயாடி...
யாரோ ஒருவருக்காக என் மீது
கடும் வார்த்தைகளை உதிர்த்தாய்...
நீ வெறுத்து திட்டிய வார்த்தைகளும்
சுகம்தானடி எனக்கு...
என்னுடன் நீ ஊடல்
கொண்டு விலகினாலும்...
நான் உன் நிழலை
போலவே தொடர்வேனடி...
என் விழிகளின்
கொஞ்சலுக்கு
நீ பதில்கொடு...
உன் இதழ்கள் திறந்து.....