காதலில் தோல்வி
கண்டதும் காதல் கொண்டேன்
அவன்தான் இனி என் உலகம்
என்று காணும் பொருளில் எல்லாம்
அவனைக்கண்டேன் பெற்றோர்
உற்றார் ஊரார் உறவினர் எல்லோரையும்
துறந்து அவன் பின்னால் ஓடிவந்தேன்
புது உறவு காண ரத்த பந்தமில்லா
ஓர் உறவு ………………..
அவனோ, என்னை ஓர் விலைமாதாய்யாக்க
ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்தான்
உண்மை இப்போது புரிந்தது ……..
என் கனவு காதலும் காதலனும் இப்போது
நெடுஞ்சாலையில் உச்சி வெய்யலில்
நீருக்கு அலையும் பாதசாரி கண்ட
கானல் நீரானதே…..இது என்ன
என் விதியா இல்லை நானே எனக்கு
வகுத்துக் கொண்ட விதியா ……………
அவனை விட்டு வெகு தூரம் வந்த நான்
தனியே புலம்புகின்றேன் இந்த வலி தாங்காது