வரவில்லையே
வந்துவிட்டேன் வழக்கம்
போல
வரவில்லையே என்றும்
போல நீ
வண்டுமொய்த்த பூக்கள்
எல்லாம் என்
வாட்டத்தைக் கண்டு
வாடி நிற்கின்றதே
வாராதிருக்க காரணம்
புரியாது என்
நெஞ்சம் யோசிக்கின்றதே
நெடுநேரமாய் நினைவை
விரட்டியதே
நெடுந்தூரமாய் எதுவும்
புலப்படாது என்
நெஞ்சம் தவிக்கின்றதே
வெகுநேரமாய்