வானம் ஞானம்
வானில்
வந்தன மேகங்கள்,
வந்தவை கறுத்தன
வானை மறைத்தன,
மோதிக்கொண்டன
மின்னல் வந்தது
இடியும் இடித்தது-
போர்களமானது வானம்..
கொட்டித் தீர்த்துவிட்டது
மழை,
மேகத்தின்
சரக்கு தீர்ந்துவிட்டது
வானம் தெளிவாகிவிட்டது,
ஆம்
வானத்திற்கு வந்தது ஞானம்..
ஓ,
இருப்பதையெல்லாம்
இழந்தால்தான்
ஞானம் பிறக்குமோ...!