இப்படி சில மாமனிதர்கள்

வில்லும் அம்பும் கையில் இருந்தால்
எல்லோரும் அர்ஜுனன் ஆவதில்லை

படித்தவன் எல்லாம் பண்டிதன் ஆவதில்லை
கையில் காகிதமும் பென்சிலும் இருந்தால்
எல்லோரும்ஓவியர்ஆவதில்லை
கருங் கல்லும் கையில் உளியும் சுத்தியும்
இருந்துவிட்டால் மட்டும் ஒருவன் சிறந்த சிற்பியாவதில்லை
எத்தனை ராமானுஜர் , எதனை சங்கரர் அவதரித்தார்
இப்பாரினில் இதுவரை கைவிட்டு எண்ணிவிடலாம்
பல கோடியில் ஒருவரே ராமானுஜனாய்,அப்துல்
காலமாய் அவதரிக்கிறார்

ஏன் …………...ஏன் என்று யோசிக்கையில்
ஒன்று மட்டும் புரிகிறது இப்புவியில்
இவர்கள் எல்லாம் பிறவியிலேயே உயர்ந்த
மனிதர்கள் பிறரை வாழவைக்கவே பிறந்த
நடமாடும் தெய்வங்கள்

படைத்தவனே உனக்கொரு வேண்டுகோள்
இன்று காட்டு மிராண்டிகள் போல்
ஒருவரை ஒருவர் மாய்த்துக்கொள்ளும்
மனிதர்களை மாற்ற நல்லதோர் தூதரை
இன்னும் நீர் பாருக்கு அனுப்பவில்லையே ஏன்
இப்படியே இந்த யுகம் அழிந்து போகட்டும்
வேறோர் யுகம் பிறக்கவா ……………..
தெரியலையே, புரியலையே இறைவா !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-May-19, 6:00 pm)
பார்வை : 129

மேலே