தாமரைப்பூ

தடாகத்தில் அத்தனையும் இன்றலர்ந்த
சிவந்த தாமரைப் பூக்கள்
நீருக்குமேல் தலை நிமிர்ந்த கோலத்தில்
உண்மையை நிலை நாட்டும் உன்னத கோலம்
அதன் விரிந்த பெரிய இலைகள்
அதன் மீது ஒட்டா நீர்த்துளிகள்
விருப்பு வெறுப்பு இல்லா துறவிப்பூ
பூக்களில் அற்புதப் பூ தாமரைப்பூ
உண்மைக்கு விளக்கம் தந்து பூத்து குலுங்குகின்றதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-May-19, 11:06 am)
பார்வை : 87

மேலே