தேர்தல் 2019 முடிவு

ஏற்றுக் கொள்ள முடியவில்லை
இருந்தாலும் பரவாயில்லை
ஏதே ஒரு நெருடல் நெஞ்சின் ஓரத்தில்

கடந்த ஐந்தாண்டுகளில்
காரியம் பெரியதாய் சாதிக்கப்படவில்லை
காசின் நிறம் மாறியதே சாதனை

வசதிப் படைத்தோர் மட்டும் ஏற்றமாய்
அரசு நிறுவனங்கள் அவலமாய்
சாதிக்கப் பிறந்ததாய் சாயப்பேச்சு

மொத்தத்தில் உற்றால் வெற்றே
கோடி பேரின் குறைத்தீர்க்க வந்ததாய் எண்ணிய
மூடி போட்ட கடமாய் மோடி

நாடி நரம்பெல்லாம் முறுக்க வாக்கிட்டு
நன்றான வாழ்க்கை வரும் என நினைப்போடு
காத்திருக்கும் இயலாதோருக்கு கானலோ புனலோ.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (23-May-19, 6:40 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 52

மேலே