நிஜ நிலவரம்,
நிஜத்தின்
முகத்தில்
பொய்யை
பூசிவிடுகிறார்கள்,
பொய்யிலும்
நிஜம் இருக்கும் என்று
நம்புவதற்க்காக,
நீங்கள்
அவற்றை
நிஜமென்றோ
பொய்யென்றோ
பிரித்தறியாமல்
இருக்கவே,
ஆனால்,
நிஜம்தான் என்றும்
பொய்தான் என்று
நீங்கள்
இரண்டாக பிரிந்து
விடுவதே அவர்களுக்கு தேவை,
நிச்சயமாக
அவர்கள் பூசியது
பொய்யைத்தான்
நிஜத்தில்,
பின், எப்படித்தான்
அறிவது என்ற
விவாதம் செய்கிறீர்கள்,
இரண்டுப்பிரிவுகளும்
நிஜத்தை சொல்லுகிறீர்கள்
நிஜம், பொய்யில்லை என்று
ஆனால் பொய்யில் இல்லை
நிஜம் என்பதை அறியாமல்.