இரட்டையர்கள்

இரட்டையர்கள் !
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

உலகில் ஒன்றினை
உணரும்போது மற்றொன்று
உருவானால் அவையெல்லாம்
இரட்டையாகுமே!

அம்மா அன்பு
தாய்மை உணர்வில்
இரட்டையர்கள்!

சூரியன் சந்திரன்
பூமி இயக்கத்தில்
இரட்டையர்கள்!

இன்பம் துன்பம்
காதலர்கள் விழிகளில்
இரட்டையர்கள் !

கவிஞன் கவிதை
கற்பனையுலகில்
இரட்டையர்கள் !

வண்ணம் ஓவியம்
எண்ணிப் பார்த்தால்
இரட்டையர்கள் !

வெற்றி தோல்வி
பிரிக்க முடியாத
இரட்டையர்கள் !

மெய் பொய்
பேச்சில் செயலில் காணும்
இரட்டையர்கள்!

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

எழுதியவர் : பொன்விலங்கு பூ.சுப்ரமணிய (24-May-19, 12:12 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 111

மேலே