இரட்டையர்கள்
இரட்டையர்கள் !
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
உலகில் ஒன்றினை
உணரும்போது மற்றொன்று
உருவானால் அவையெல்லாம்
இரட்டையாகுமே!
அம்மா அன்பு
தாய்மை உணர்வில்
இரட்டையர்கள்!
சூரியன் சந்திரன்
பூமி இயக்கத்தில்
இரட்டையர்கள்!
இன்பம் துன்பம்
காதலர்கள் விழிகளில்
இரட்டையர்கள் !
கவிஞன் கவிதை
கற்பனையுலகில்
இரட்டையர்கள் !
வண்ணம் ஓவியம்
எண்ணிப் பார்த்தால்
இரட்டையர்கள் !
வெற்றி தோல்வி
பிரிக்க முடியாத
இரட்டையர்கள் !
மெய் பொய்
பேச்சில் செயலில் காணும்
இரட்டையர்கள்!
பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்