கடவுளும் கவர்மெண்டும்

கடவுளும் கவர்மெண்டும் ஒன்று
அதைத் தூற்றாதே; பழி சேரும்
உனக்கு. அதற்கு
ஆயிரம் கண்கள்: காதுகள்.
ஆனால் குறையென்றால்
பார்க்காது கேட்காது
கை நீளும்; பதினாயிரம்
கேட்கும், பிடுங்கும்.
தவமிருந்தால்
கொடுக்கும்.
கவர்மெண்ட் பெரும் கடவுள்
அதைப் பழிக்காதே
பழித்தால்
வருவது
இன்னும்
அதிகம்
கவர்ன்மெட்தான்.



கி. கஸ்தூரி ரங்கன்

[ஆகஸ்ட் 1965]



Save
Share

எழுதியவர் : கி. கஸ்தூரி ரங்கன் (25-May-19, 5:12 am)
பார்வை : 42

மேலே