காதல்

நேற்று நீ என்னை உன் நாவால்
சாடிய வார்த்தைகள் இன்னும்
என்னுள்ளத்தில் கத்திரி வெய்யலாய்
காய்ந்து சுட்டெரிக்க , இதோ வெட்கம் இல்லாது
நீ அனுப்பிய எஸ் எம் எஸ் கைப்பேசியில்,....
' நிலவின் ஒளிபோல் வந்து குளிர்
தரவா இன்றிரவு' என்கிறாயே …….
இதுவே நம் காதலுக்கு நீ
உறுதியாய் வைத்த முற்றுப்புள்ளி
என்று அறிந்துக்கொள்……..
'பலோவ்-ஹாட் , பலோவ் -கோல்டு ' உறவு
தேடி அலைபவள் அல்ல நான்
புனித காதல் தேடி அலையும் பெண் நான்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-May-19, 8:27 am)
Tanglish : kaadhal
பார்வை : 107

மேலே