மறுபடியும்

என்னை
மண் செய் மறுபடியும்
என்று மண்பானை
கேட்டதற்க்கிணங்க,
குழைக்க
நீர் தெளிக்கிறேன்,

மசியாதிருக்கிறது
விசையாதென்ற போது,
விதி என்றது,

சுட்ட இடம் ஏதென்றேன்
சுற்றிலும் என்றது,
உடைத்தால் உருகுவாயா
என்றேன்,
விடைதான்
தெரியாதென்றது.

எழுதியவர் : சபீரம் சபீரா (26-May-19, 9:28 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 110

மேலே