மனிதன் யார்,
மனப்பிறழ்ந்தவன்
யாரிடம்
பேசிக்கொண்டிருக்கிறான்?
இத்தனை சந்தோஷமாக,
அவன் உலகில் அனைத்தும்
மகிழ்வானதாகவே இருக்கிறது.
உணவோ,உடுப்போ
இருப்பிடமோ, சேமிப்போ
அற்ற அவனிடம் சந்தோஷம்,
எல்லாவற்றிலும்
இரண்டிரண்டு வைத்திருக்கும்
பைத்திக்கார மனிதன்
சோகமாகவே
இருந்தழிவதேன்?