பாவத்தை மீண்டும் சுமக்கிறார்
பந்திக்கு முந்திவரும்
பெருத்த வயித்துக்கு
பரிமாறும் உணவுகள்
போற இடம் தெரியாது—மனமும்
போதுமென சொல்லாது
உண்ண முடியாம
உடம்பு நோவெடுக்க
ஈதல் அறமென
ஈசனுக்கு ஒப்பாக—அவர்
இலையுடன் சோற்றை
எடுத்து வந்து தெருவில் வீச
சோற்றைக் கண்டதும்
ஓடிவந்த நாய்கள்
ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு
கடித்துக் குதறியதில்
குருதித் துளிகள் சிதற
பட்டினிக்கிடக்கும் உயிர்களின்
பசிக்கொடுமையை
புரிந்து திருந்தியிருப்பார்,
பாவம் நாய்கள்—இவர்
பாவத்தை மீண்டும் சுமக்கிறார்