சிங்கத்தின் சைவ சித்தாந்தம்

என்னில் பெரியது நீல
கண்ணன் நிறத்து யானை
தன்னால் ஒரு உயிரையும்
அழித்து அது உண்டதில்லை

தருவில் வசித்து வரும்
வண்ண நிற கிளிகள் கூட
உருவில் சிறியதான பூச்சி
புழுக்களை உண்டதில்லை

மரமோ மல்லிகையோ
மனங்கொடுக்கும் வெட்டிவேரோ
மரிக்குமளவு துன்பம் வரின்
மனமாறி ஊணை உண்டதில்லை

மதிக் கொண்ட மனிதர் தாம்
மனம் போலே உண்ணுவதைப் போல்
மதிக் குறைந்த எம் விலங்கினமோ
மறந்தும் சைவம் உண்ணுவதில்லை

ஏன் இந்த நிலை என்று
எண்ணி எண்ணி வியக்கின்றேன்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-May-19, 1:15 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 69

மேலே