அந்த கனவுகள் ஓயவில்லை

யாரைக்கேட்டாலும்
கடலலை தான்
ஓயாதது என்பார்கள்...
ஆனால்
நான் மட்டும் சற்று வித்தியாசமானவள்...
என்ன??
உன் நினைவலை' என்பேன் என நினைக்கிறாயா!!!
நிச்சயம் இல்லை அப்பா.
உம் மார்பெனும் படுக்கையிலே...
உன் இதயத்துடிப்பாம்
நீ பாடாத தாலாட்டில்...
என் தலைத்தடவி,
நீ அழைத்துவந்த என் உறக்கத்தில்
நான் கண்ட கனவுகள்

நீ போனபின்பு நான் உறங்குவதே இல்லை... எனினும்...
இப்போதும்...
அந்த கனவுகள் ஓயவே இல்லை.
உன்மேல் நான் கொண்ட அன்பு போல.....

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (27-May-19, 10:32 pm)
பார்வை : 357

மேலே