கசாப்புக்கு சென்ற முதிய காளை

கசாப்பு கடைக்கு ஓட்டிச்செல்லப்பட்ட
வயதான வலுவற்ற காளை
கடைக்குள் நுழையவிட முயலும் கசப்புக்காரன்
தன்னை இதோ வெட்டிவிடப்போகிறான்
என்றறிந்து வேண்டாம் விட்டதே என்பதுபோல்
'அம்மா; என்று ஈனக்குரலில் கதற
கதற கதற இழுத்து செல்லப்படுகிறது காளை
இப்போது காளை மனதின் முன் ………
அது முரட்டுக்காளையாய் இருந்த அந்த
நாட்கள் நினைவுக்கு வருகிறது
தன்னைப் பிடிக்க வந்த வீரனை
முட்டி கொம்பால் தூக்கியடித்த அந்த நாட்கள்…
கண்ணீர் வழிகிறது அழுகிறது காளை
இப்போது லேசாக தலையை அசைத்து
அவனை முட்டி தப்பி ஓட பார்க்க
திராணி இல்லைக் காளைக்கு இப்போது
பாவம், அவன் அதன் வாலை முறுக்கி
அடக்கி தலையை பீடத்தில் சாய்க்க
கடைசிமுறையாய் 'அம்மா' என்று கத்த
அதன் தலை வெட்டப்படுகிறது…..
முடிந்தது அதன் கதை …..

மனிதருக்கு மட்டுமல்ல உணர்ச்சிகள்
மிருகங்களுக்கும் உண்டு , உண்டு ..
இதை நாம் அறிந்துகொள்வதுதான் எப்போது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-May-19, 11:57 am)
பார்வை : 46

மேலே